
ஃபேஸ்புக் கருத்துக்காக இலங்கை இளைஞருக்கு சவூதியில் 5 ஆண்டு சிறை
நாய் தாக்குதல் தொடர்பான சர்ச்சையில் தொடங்கி, ஃபேஸ்புக்கில் நபிகள் நாயகம் குறித்து இலங்கை இளைஞர் ஒருவர் பதிவிட்ட கருத்து பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இதையடுத்து சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த அவர் கைது செய்யப்பட்டு, தற்போது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.




